அடிக்குறிப்பு
a பயப்படுவது தவறு என்று சொல்ல முடியாது. சொல்லப்போனால், அது ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆனால், தேவையில்லாமல் பயப்படுவது நம்மை ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். எப்படி? பயத்தை சாத்தான் ஒரு கண்ணியாகப் பயன்படுத்தி, அவனுடைய வலையில் நம்மை விழ வைத்துவிடுவான். அதனால், தேவையில்லாத பயத்தை விட்டொழிக்க நாம் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும். அப்படிச் செய்ய நமக்கு எது உதவும்? யெகோவா நம்பக்கம் இருக்கிறார்... நம்மேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார்... என்பதை உறுதியாக நம்பும்போது எப்படிப்பட்ட பயத்தையும் நம்மால் சமாளிக்க முடியும். அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.