அடிக்குறிப்பு
a கடவுளுடைய ராஜ்யம் என்பது ஒருவருக்குள் அல்லது ஒருவருடைய இதயத்தில் அல்லது மனதில் இருப்பதாக நிறைய சர்ச்சுகள் சொல்லித்தருகின்றன. உதாரணத்துக்கு, “நம்முடைய இதயங்களைக் கடவுள் ஆட்சி செய்வதுதான் கடவுளுடைய ராஜ்யம்” என்று கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. அதேபோல், “நம் இதயத்தைத் திறந்து கடவுள் சொல்வதைக் கேட்கும்போது கடவுளுடைய ராஜ்யம் வரும்” என்று நாசரேத்தூர் இயேசு என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் பதினாறாம் போப் பெனடிக்ட் சொன்னார்.