அடிக்குறிப்பு
e இந்தத் தீர்க்கதரிசனம் சகரியா புத்தகத்தில் இருக்கிறது. ஆனால், இது “எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது” என்று பைபிள் எழுத்தாளரான மத்தேயு சொல்லியிருக்கிறார். (மத்தேயு 27:10) வேதாகமத்தில், ‘தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்’ என்று அழைக்கப்பட்ட பகுதியில் எரேமியா புத்தகம் முதலில் இருந்ததாகத் தெரிகிறது. (லூக்கா 24:44) அதனால்தான், சகரியா புத்தகம் உட்பட அந்தத் தீர்க்கதரிசனப் புத்தகங்களின் முழு தொகுப்பையும் குறிப்பதற்காக “எரேமியா” என்று மத்தேயு சொல்லியிருக்கலாம்.