-
யெகோவா சமாதானத்தையும் சத்தியத்தையும் ஏராளமாக அருளுகிறார்காவற்கோபுரம்—1996 | ஜனவரி 1
-
-
“நான் . . . அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.”—எரேமியா 33:6.
-
-
யெகோவா சமாதானத்தையும் சத்தியத்தையும் ஏராளமாக அருளுகிறார்காவற்கோபுரம்—1996 | ஜனவரி 1
-
-
3. எரேமியாவின் மூலம் சொல்லப்பட்ட யெகோவாவுடைய வார்த்தைகளின் நிறைவேற்றமாக, சரித்திரப்பூர்வமான என்ன சம்பவங்கள் சமாதானத்தைப் பற்றிய முக்கியமான இரண்டாவது பாடத்தை இஸ்ரவேலுக்குக் கற்பித்தன?
3 எனினும், எகிப்து அல்ல, யெகோவா தாமே இஸ்ரவேலுக்கு உண்மையான சமாதானத்தைக் கொண்டுவருவாரென்று எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்னால் அவர் வெளிப்படுத்தியிருந்தார். எரேமியாவின் மூலம் இவ்வாறு வாக்களித்திருந்தார்: ‘நான் . . . அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததைப்போல அவர்களைக் கட்டுவிப்பேன்.’ (எரேமியா 33:6, 7) பொ.ச.மு. 539-ல், பாபிலோன் வென்று கைப்பற்றப்பட்டு, நாடுகடத்தப்பட்டிருந்த இஸ்ரவேலருக்கு விடுதலை அளிக்கப்பட்டபோது, யெகோவாவின் வாக்குத்தத்தம் நிறைவேறத் தொடங்கினது. (2 நாளாகமம் 36:22, 23) பொ.ச.மு. 537-ன் பிற்பகுதிக்குள், ஒரு தொகுதியான இஸ்ரவேலர், 70 ஆண்டுகளில் முதல் தடவையாக, இஸ்ரவேலின் மண்ணின்மீது கூடாரப் பண்டிகையை ஆசரித்தனர்! அந்தப் பண்டிகைக்குப் பின்பு, யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்குத் தொடங்கினர். இதைக் குறித்து அவர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள்? பதிவு சொல்வதாவது: “யெகோவாவைத் துதிக்கையில், . . . யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடப்பட்டதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரித்தார்கள்.”—எஸ்றா 3:11, தி.மொ.
-