பாட்டு 20
ராஜ்ய களிப்பின் பாடலைப் பாடுங்கள்
1. ராஜ்யகளிப்பின் பாடலே,
பாடுங்கள் மண்ணோரே.
சப்தமாய்ப் புதுப்பாடலை,
ராஜ்யத்தின் பிறப்பை.
நற்செய்தி சொல்வோர் பாதங்கள்
அழகானவைகள்!
தேசமெங்கும் அறிவிப்பர்,
‘தேவமீட்பு’ என்பர்.
2. ராஜ்யகளிப்பின் இப்பாட்டு
தேவ மகிமைக்கு.
பயபக்தியாய்த் தொழுவோம்,
மாநாமம் துதிப்போம்.
மக்கள் பணியும் சிலைகள்
மதிப்பற்றவைகள்.
மெய்வணக்கம் பற்றிக்கொள்வோம்.
சத்தியத்தைப் பெறுவோம்.
3. ராஜ்யகளிப்பில் சேர்வீரே:
“யெகோவாராஜாவே.”
மகன்மூலம் ஆளுகிறார்.
வானோர் பூரிக்கிறார்.
நியாயந்தீர்க் கவருகிறார்.
நீதியாய்த் தீர்க்கிறார்.
உண்மையாய் நிரூபிப்போரே,
ஆசீர்வதிப்பாரே.