பாட்டு 169
புதுப் பாட்டு
1. நம் கர்த்தருக்குப் புதுப்பாட்டொன்றுபாடுங்கள்.
அவர் மாசெயல்கள் அனைத்தும் சொல்லுங்கள்.
தேவனின் வெற்றிக்கரத்தையும் துதியுங்கள்;
வழங்கினாரவர் நீதியின் தீர்ப்புகள்.
(பல்லவி)
2. பூமியனைத்தும் யெகோவாவைப்பாடட்டுமே.
துதிப்பீர் ஆனந்த கெம்பீரத்துடனே.
சுரமண்டலம், பூரிகை, எக்காளத்தாலே.
யெகோவாவை ஒன்றாய்ப் போற்றிப்பாடுவீரே.
(பல்லவி)
3. சமுத்திரமும் அதன் நிறைவும் போற்றட்டும்.
பூமியின்குடிகள் துதிமுழங்கட்டும்.
ஆறுகள் எல்லாம் கைகொட்டி மகிழட்டுமே.
பர்வதங்கள்கூட துதிபாடட்டுமே.
(பல்லவி)
பாடுங்கள்!
ஒரு புதுப்பாட்டை.
பாடுங்கள்!
யெகோவா ராஜாவை.