பாட்டு 53
தேவாட்சியின் விருத்தி
1. விருத்திகாணும் தேவாட்சி வாழ்த்துங்கள்!
அதிசய அதிகரிப்புகள்.
யெகோவாவின் ஒளியில் நடப்பவர்
இடைவிடாமல் துதிக்கின்றனர்.
வெகுகாலம் முன்னர் நம் மீட்பர்தாமே
சிறிதாய் ஆரம்பித்து வைத்தாரே.
மீதியானோரை திரள் கூட்டத்தினர்
சேர்ந்து மைந்தனைத் துதிக்கின்றனர்.
2. கிறிஸ்து சிங்காசனத்தில் ஆள்கிறாரே.
தேசங்கள், மக்கள் நிற்கின்றனரே.
விரைவில் சத்துருக்களை அழிப்பார்.
அரசுரிமை நிலைநாட்டுவார்.
சமாதானப்பிரபு, நித்தியப்பிதா,
வல்லதேவன், ஆலோசனைக் கர்த்தா.
யெகோவா நித்திய சமாதானம் ஈவார்.
அவ்வாட்சி விருத்தி காணச்செய்வார்.
3. இன்று உயிர்வாழ்வது என்னே சிலாக்கியம்!
வளர்ச்சி இதயத்திற்கு இன்பம்.
கொடுப்பதில் மகிழ்ச்சியைக் காணுங்கள்.
சாட்சி வேலையில் பங்குகொள்ளுங்கள்.
தேவன் பேர்பழிப்போர் எச்சரியுங்கள்.
அர்மகெதோனைப்பற்றி சொல்லுங்கள்.
பேரார்வத்துடனே அறிவியுங்கள்.
துக்கிப்போருக்குச் செய்தி சொல்லுங்கள்.