பாட்டு 34
நம் பெயருக்கேற்ப ஜீவித்தல்
1. மகிமைமாவல்ல நித்திய யெகோவா
நீதி அன்பில் நிகரற்றபிதா.
ஞானம் சத்தியத்தின் ஊற்றாயிருக்கிறீர்.
பேரரசராய் ஆட்சி செய்கிறீர்.
உம்சேவையில் தூதர்கள் மகிழவே,
படைப்பின் அற்புதங்கள் போற்றவே.
உமதுசாட்சிகள் என்றபேர் பெற்றோம்.
எங்கள் பெயருக்கேற்ப ஜீவிப்போம்!
2. யெகோவாவே, எல்லா சந்தர்ப்பத்திலும்
உம்மைக் கனப்படுத்த உதவும்.
கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடப்போம்
அவர் போதனைகளைக் கைக்கொள்வோம்.
எங்கள் நடத்தையைக் காத்துக்கொள்வோமே.
உம்மை நிந்திக்கவிடமாட்டோமே.
சாட்சிகளாயிருப்பது சிலாக்கியமே.
எங்கள் பேருக்கேற்ப ஜீவிப்போமே!
3. அருமை சேவையில் தொடர்ந்திருப்போம்.
அன்புடன் ஒற்றுமையாய் உழைப்போம்.
தேவதிருப்தியில்தினம்மகிழ்வோம்.
உம்துதிஓங்குகையில் பூரிப்போம்.
எங்கள் பெயருக்கேற்ப என்றும் வாழ்வோம்.
எல்லாருக்கும் ஜீவசத்தியம் சொல்வோம்.
உம் இருதயத்தை மகிழ்விப்போமே.
ஆ, யெகோவா, எங்கள் அரசரே!