கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய பயிற்சி கொடுங்கள்
ஊழியத்தில் தவறாமலும் பக்திவைராக்கியத்தோடும் கலந்துகொள்ள புதிய பிரஸ்தாபிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்சி கொடுக்கும்போது, அவர்கள் பலன்தரும் பிரஸ்தாபிகளாக ஆவதை அனுபவம் காட்டுகிறது. (நீதி 22:6; பிலி 3:16) திறமையாக ஊழியம் செய்ய ஒரு மாணவருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு உதவும் சில ஆலோசனைகள்:
உங்கள் மாணவர் ஒரு பிரஸ்தாபியாக ஆனதுமே, அவருக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பியுங்கள். (km 8/15 பக். 1) ஊழியத்தில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் கலந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்குப் புரியவையுங்கள். (பிலி 1:10) உங்கள் பிராந்தியத்தைப் பற்றி நல்ல விதமாகப் பேசுங்கள். (பிலி 4:8) தொகுதி கண்காணியோடும் மற்ற பிரஸ்தாபிகளோடும் ஊழியம் செய்யும்படியும், அவர்களுடைய அனுபவத்திலிருந்து நன்மை அடையும்படியும் அவரை உற்சாகப்படுத்துங்கள்.—நீதி 1:5; km 10/12 பக். 6 பாரா 3
உங்கள் மாணவர் ஞானஸ்நானம் எடுத்த பிறகும், ஊழியத்தில் அவருக்குத் தேவைப்படும் உற்சாகத்தையும் பயிற்சியையும் தொடர்ந்து கொடுங்கள். முக்கியமாக, “கடவுளது அன்பு” புத்தகத்தை அவர் இன்னும் படித்து முடித்திருக்கவில்லை என்றால், அவருக்குத் தொடர்ந்து உதவி செய்யுங்கள்.—km 12/13 பக். 7
புதிய பிரஸ்தாபியோடு ஊழியம் செய்யும்போது, எளிமையாகப் பேசுங்கள். அவர் பேசுவதைக் கேட்ட பிறகு, தாராளமாகப் பாராட்டுங்கள். இன்னும் திறமையாக ஊழியம் செய்ய அவருக்கு ஆலோசனைகள் கொடுங்கள்.—km 5/10 பக். 7