பாடல் 83
“வீடு வீடாய் வாழ்வின் செய்தி!”
1. செல்வோம், செல்வோம், வீடு வீடாய்,
நற்செய்தி சொல்லத்தான்.
உண்மை என்ன என்றே தேடும்
உள்ளங்கள் தேடத்தான்.
அங்கே இங்கே எங்கெங்குமே
நற்செய்தி போகுதே.
நம் ஏசு அன்று சொன்னதை
நம் கண்கள் காணுதே.
2. சொல்வோம், சொல்வோம், வீடு வீடாய்,
நம் மீட்பின் செய்தியை.
யெகோவாவின் பேரை ஏற்போர்
என்றென்றும் வாழ்வரே.
சொல்லாமலே வாய் மூடினால்
உண்மைகள் யார் சொல்வார்?
உண்மைகள்தான் போய் சேராமல்
யார் தேவனை ஏற்பார்?
3. தேவன் ஆட்சி வரும் என்றே,
வீடு வீடாய் சொல்வோம்.
வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ
கேட்போரே சொல்லட்டும்.
ஒவ்வோர் நாளும் யெகோவா பேர்,
ஓயாமல் சொல்லுவோம்.
நல்லோர் தேடும் நம் தேடலில்,
ஓர் நாள் வெற்றி காண்போம்!
(பாருங்கள்: அப். 2:21; ரோ. 10:14.)