பைபிள் போதனை
இயேசு “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்”
இயேசு எப்போதுமே யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறார். (யோவா. 8:29) அப்படியிருக்கும்போது, “தான் பட்ட கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” என்று பைபிள் ஏன் சொல்கிறது?—எபி. 5:8.
பரலோகத்தில் இல்லாத சூழ்நிலைகளை இயேசு பூமியில் சந்தித்தார். கடவுள்பக்தியுள்ள, ஆனால் பாவ இயல்புள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டார். (லூக். 2:51) மோசமான மதத் தலைவர்களாலும், அநியாயமாக நடந்துகொண்ட ஆட்சியாளர்களாலும் வேதனைகளைச் சந்தித்தார். (மத். 26:59; மாற். 15:15) அதோடு, “சாகும் அளவுக்கு,” அதுவும் துடிதுடித்து சாகும் அளவுக்கு, “தன்னையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்.”—பிலி. 2:8.
பரலோகத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இல்லாததால், பூமியில் இருந்தபோது வேறொரு விதத்தில் இயேசு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அதனால், நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்பட முடிந்த தலைமைக் குருவாகவும், ஒரு பரிபூரண ராஜாவாகவும், அவரால் ஆக முடிந்திருக்கிறது. (எபி. 4:15; 5:9) கஷ்டங்களிலிருந்து இயேசு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்ட பிறகு, யெகோவாவுக்கு இன்னும் அருமையானவராக ஆனார். நாமும் கஷ்டமான சூழ்நிலைகளில் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால், அவருக்கு அருமையானவர்களாக இருப்போம், பிரயோஜனமானவர்களாக இருப்போம்.—யாக். 1:4.