-
யாத்திராகமம் 30:1-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 பின்பு அவர், “தூபப்பொருளை எரிப்பதற்காக+ நீ வேல மரத்தால் ஒரு பீடம் செய்.+ 2 அது சதுரமாக இருக்க வேண்டும். அதன் நீளம் ஒரு முழமாகவும்,* அகலம் ஒரு முழமாகவும், உயரம் இரண்டு முழமாகவும் இருக்க வேண்டும். அதன் கொம்புகள் அதனோடு இணைந்திருக்க வேண்டும்.+ 3 அதன் மேல்பகுதிக்கும் சுற்றுப்பகுதிக்கும் கொம்புகளுக்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடி. அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய். 4 பீடத்தைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளைச் செருகுவதற்காக, அந்த வேலைப்பாட்டுக்குக் கீழே இரண்டு எதிரெதிர் பக்கங்களில் இரண்டிரண்டு தங்க வளையங்களைப் பொருத்து. 5 வேல மரத்தால் கம்புகள் செய்து அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும்.
-