-
யாத்திராகமம் 28:15-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 தையல் வேலைப்பாடு செய்கிறவரை வைத்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தைச் செய்ய வேண்டும்.+ ஏபோத்தைப் போலவே இதையும் தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் செய்ய வேண்டும்.+ 16 இரண்டாக மடிக்கும்போது அது சதுரமாக, ஒரு சாண்* நீளத்திலும் ஒரு சாண் அகலத்திலும் இருக்க வேண்டும். 17 அதில் நான்கு வரிசையாகக் கற்களைப் பதிக்க வேண்டும். முதலாம் வரிசையில் மாணிக்கம், புஷ்பராகம், மரகதம் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். 18 இரண்டாம் வரிசையில் நீலபச்சைக் கல், நீலமணிக் கல், சூரியகாந்தக் கல் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். 19 மூன்றாம் வரிசையில் கெம்புக் கல்,* வைடூரியம், செவ்வந்திக் கல் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். 20 நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், பச்சைக் கல் ஆகியவற்றைப் பதிக்க வேண்டும். இவற்றைத் தங்க வில்லைகளில் பதிக்க வேண்டும். 21 இந்த 12 கற்களும் இஸ்ரவேலின் மகன்களுடைய 12 பெயர்களின்படி இருக்க வேண்டும். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு பெயர் என 12 கோத்திரங்களின் பெயர்களும் முத்திரையாகப் பொறிக்கப்பட வேண்டும்.
-