-
யோசுவா 2:9-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அவள் அவர்களிடம், “இந்தத் தேசத்தை யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாகக் கொடுப்பார்+ என்று எனக்குத் தெரியும். உங்களை நினைத்து நாங்கள் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.+ இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்.+ 10 ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது உங்கள் முன்னால் செங்கடலை யெகோவா வற்றிப்போகச் செய்ததையும்,+ எமோரியர்களின் இரண்டு ராஜாக்களான சீகோனையும்+ ஓகையும்+ யோர்தானின் கிழக்கே நீங்கள் அழித்துப்போட்டதையும் கேள்விப்பட்டோம். 11 அதைக் கேள்விப்பட்டபோது வெலவெலத்துப்போனோம். இப்போது உங்களை எதிர்க்க யாருக்குமே தைரியம் இல்லை. மேலே வானத்திலும் சரி, கீழே பூமியிலும் சரி, உங்கள் கடவுளாகிய யெகோவாதான் கடவுள்.+
-
-
யோசுவா 5:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 இஸ்ரவேலர்கள் யோர்தானைக் கடப்பதற்காக யெகோவா அதன் தண்ணீரை வற்றிப்போக வைத்ததைப் பற்றி யோர்தானின் மேற்குப் பகுதியிலிருந்த எமோரிய+ ராஜாக்களும் கடலுக்குப் பக்கத்திலிருந்த கானானிய ராஜாக்களும்+ கேள்விப்பட்டார்கள். அதைக் கேள்விப்பட்டவுடன் வெலவெலத்துப்போனார்கள்.+ இஸ்ரவேலர்களை எதிர்க்க அவர்கள் யாருக்குமே தைரியம் இல்லாமல் போய்விட்டது.+
-