-
லேவியராகமம் 5:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர அவனுக்கு வசதியில்லை என்றால், ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு*+ நைசான மாவைப் பாவப் பரிகாரத்துக்கான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். அதன்மேல் எண்ணெய் ஊற்றவோ சாம்பிராணியை வைக்கவோ கூடாது. அது பாவப் பரிகாரத்துக்கான காணிக்கை. 12 அதை அவன் குருவானவரிடம் கொண்டுவர வேண்டும். குருவானவர் அதிலிருந்து ஒரு கைப்பிடி மாவை எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாகப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அதாவது, யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகள்மேல் எரிக்க வேண்டும். அது பாவப் பரிகார பலி.
-
-
லேவியராகமம் 6:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 உணவுக் காணிக்கைக்கான சட்டம் இதுதான்:+ உணவுக் காணிக்கையைப் பலிபீடத்தின் முன்பு யெகோவாவின் முன்னிலையில் ஆரோனின் மகன்கள் படைக்க வேண்டும். 15 அவர்களில் ஒருவன் அதிலிருந்து ஒரு கைப்பிடி நைசான மாவையும், கொஞ்சம் எண்ணெயையும், சாம்பிராணி முழுவதையும் எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+
-