-
லேவியராகமம் 14:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 இவற்றைச் செலுத்த வசதியில்லாத ஒரு ஏழையாக அவன் இருந்தால், பாவப் பரிகாரம் செய்வதற்காக ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் குற்ற நிவாரண பலியாகவும் அசைவாட்டும் காணிக்கையாகவும் அவன் கொண்டுவர வேண்டும். உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கும்,* எண்ணெயைச் சுமார் 300 மில்லியும் கொண்டுவர வேண்டும். 22 அதோடு, இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர வேண்டும். ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும்+ கொடுக்க வேண்டும்.
-