-
யோசுவா 17:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 ஆனால், மனாசேயின் கொள்ளுப்பேரனும் மாகீரின் பேரனும் கீலேயாத்தின் மகனுமாகிய ஹேப்பேருக்குப் பிறந்த செலோப்பியாத்துக்கு+ மகன்கள் இல்லை, மகள்கள் மட்டும்தான் இருந்தார்கள். அவர்களுடைய பெயர்கள்: மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், மற்றும் திர்சாள். 4 அந்தப் பெண்கள் குருவாகிய எலெயாசாரிடமும்+ நூனின் மகனாகிய யோசுவாவிடமும் மற்ற தலைவர்களிடமும் வந்து, “எங்கள் அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு எங்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென்று மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தாரே”+ என்றார்கள். அதனால் யெகோவாவின் கட்டளைப்படி, அவர்களுடைய அப்பாவின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கப்பட்டது.+
-