-
லேவியராகமம் 23:27-31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 “இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள் உங்களுக்குப் பாவப் பரிகார நாள்.+ அன்று பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். உங்களையே வருத்திக்கொண்டு,*+ யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். 28 அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால், அது பாவப் பரிகார நாள். அன்று, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும்.+ 29 அன்று தன்னையே வருத்திக்கொள்ளாத* எவனும் கொல்லப்பட வேண்டும்.+ 30 அந்த நாளில் ஒருவன் எந்த வேலை செய்தாலும் அவனை நான் அழித்துவிடுவேன். 31 அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. நீங்கள் எங்கு குடியிருந்தாலும் இதுவே தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.
-