-
எண்ணாகமம் 14:33, 34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 உங்கள் மகன்கள் தங்களுடைய மந்தைகளை 40 வருஷங்களுக்கு+ இந்த வனாந்தரத்தில் மேய்க்க வேண்டியிருக்கும். நீங்கள் செய்த துரோகங்களுக்காக அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். நீங்கள் எல்லாருமே இந்த வனாந்தரத்தில் சாகும்வரை அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள்.+ 34 நீங்கள் அந்தத் தேசத்தை உளவு பார்த்த 40 நாட்களின்படியே,+ ஒரு நாளுக்கு ஒரு வருஷம் என்ற கணக்கில் 40 வருஷங்கள்+ உங்கள் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுவீர்கள். என்னை எதிர்த்தால் உங்களுடைய கதி என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
-