7 பின்பு யெகோவா ஆபிராமுக்குத் தோன்றி, “உன்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதனால், ஆபிராம் யெகோவாவுக்காக அங்கே ஒரு பலிபீடம் கட்டினார்.
3 இந்தத் தேசத்தில் அன்னியனாகத் தங்கியிரு.+ நான் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் அப்பாவான ஆபிரகாமுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன்.+
13 அதன் உச்சியில் யெகோவா இருந்தார். அவர் யாக்கோபிடம்,
“உன்னுடைய தாத்தா ஆபிரகாமின் கடவுளும் உன்னுடைய அப்பா ஈசாக்கின் கடவுளுமான யெகோவா நான்தான்.+ நீ படுத்திருக்கிற இந்த இடத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்.+