-
1 ராஜாக்கள் 8:35, 36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 அவர்கள் உங்களுக்கு எதிராகத் தொடர்ந்து பாவம் செய்ததால்+ வானம் அடைபட்டு மழை பெய்யாமல் போகும்போது,+ அவர்கள் இந்த இடத்தை நோக்கி ஜெபம் செய்தால், உங்கள் பெயரை மகிமைப்படுத்தினால், அவர்களை நீங்கள் தாழ்த்தியதன்* காரணமாகத் தங்களுடைய பாவத்தைவிட்டுத் திருந்தினால்,+ 36 நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு உங்களுடைய ஊழியர்களும் உங்களுடைய மக்களுமான இஸ்ரவேலர்கள் செய்த பாவத்தை மன்னியுங்கள். அவர்கள் நடக்க வேண்டிய நல்ல வழியைக் கற்றுக்கொடுங்கள்;+ உங்களுடைய மக்களுக்குச் சொத்தாகக் கொடுத்த உங்கள் தேசத்தில் மழை பெய்யப் பண்ணுங்கள்.+
-
-
2 நாளாகமம் 7:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 மழை பெய்யாதபடி நான் வானத்தை அடைக்கும்போது, நிலத்தை அழிப்பதற்கு வெட்டுக்கிளிகளை அனுப்பும்போது, என் மக்களைத் தாக்க கொள்ளைநோயை அனுப்பும்போது 14 என் பெயரால் அழைக்கப்படும் என் மக்கள்+ தாழ்மையாக நடந்து+ என்னிடம் ஜெபம் செய்தால், பரலோகத்திலிருந்து அதைக் கேட்பேன்; தங்களுடைய பொல்லாத வழிகளைவிட்டு விலகி என்னைத் தேடினால்,+ அவர்களுடைய பாவத்தை மன்னிப்பேன், அவர்களுடைய தேசத்தைச் செழிப்பாக்குவேன்.+
-