உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 15:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 உங்களுக்குள் யாரும் ஏழையாக இருக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா சொத்தாகக் கொடுக்கிற தேசத்தில் யெகோவா உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.+

  • உபாகமம் 15:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில், உங்கள் சகோதரன் ஒருவன் ஏழையாகிவிட்டால் அவனிடம் கல்நெஞ்சத்தோடு நடந்துகொள்ளாதீர்கள். அந்த ஏழை சகோதரனிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.+

  • உபாகமம் 15:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நீங்கள் அவனுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும்,+ வேண்டாவெறுப்போடு கொடுக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.+

  • நீதிமொழிகள் 19:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான்.+

      அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.*+

  • லூக்கா 6:34, 35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அதோடு, திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால்,* உங்களைப் பாராட்ட என்ன இருக்கிறது?+ பாவிகளும்கூட அப்படி எதிர்பார்த்துதான் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்கள். 35 உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், அவர்களுக்கு நல்லது செய்யுங்கள், எதையும் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்.+ அப்போது, உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும், உன்னதமான கடவுளுடைய பிள்ளைகளாகவும் இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நன்றிகெட்டவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும்கூட கருணை காட்டுகிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்