உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மல்கியா 2:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 ஏனென்றால், விவாகரத்தை நான் வெறுக்கிறேன்”+ என்று இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்கிறார். “வன்முறையில் ஈடுபடுகிறவனையும் நான் வெறுக்கிறேன்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “அதனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருந்து, நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். துரோகம் செய்யாதீர்கள்.+

  • மத்தேயு 1:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஆனால், அவளுடைய கணவரான யோசேப்பு நீதிமானாக இருந்ததால், எல்லார் முன்னாலும் அவளை அவமானப்படுத்த விரும்பவில்லை; அதனால், அவளை ரகசியமாக விவாகரத்து* செய்ய நினைத்தார்.+

  • மத்தேயு 19:3-8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவரைச் சோதிப்பதற்காக பரிசேயர்கள் அவரிடம் வந்து, “ஒருவன் தன்னுடைய மனைவியை எந்தக் காரணத்துக்கு வேண்டுமானாலும் விவாகரத்து செய்வது சரியா?”+ என்று கேட்டார்கள். 4 அதற்கு அவர், “கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்+ என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? 5 ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்;* அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக* இருப்பார்கள்’+ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? 6 அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை* எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்”+ என்று சொன்னார். 7 “அப்படியானால், விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஏன் சொன்னார்?”+ என்று அவர்கள் கேட்டார்கள். 8 அதற்கு அவர், “உங்களுடைய இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய அவர் அனுமதித்தார்.+ ஆனால், ஆரம்பத்திலிருந்து அப்படி இல்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்