19இரண்டாவது குலுக்கல்+ சிமியோன் கோத்திரத்தாருக்கு+ விழுந்தது. அவரவர் குடும்பத்தின்படி அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. அவர்களுடைய பங்கு யூதா கோத்திரத்தாருடைய பகுதியில் இருந்தது.+
54 லேவியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முகாம்போட்டிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த இடங்கள் இவையே: ஆரோனின் வம்சத்தில் வந்த கோகாத்தியர்களுக்கு முதல் குலுக்கல் விழுந்தது. 55 அதன்படி, யூதா பிரதேசத்தில் எப்ரோனும் அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.+
60 ஆரோனின் வம்சத்தாருக்கு பென்யமீன் கோத்திரத்தார் கொடுத்த இடங்கள்: கெபாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அலெமேத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், ஆனதோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். மொத்தம் 13 நகரங்கள் அவர்களுடைய வம்சத்தாருக்குக் கிடைத்தன.+