-
உபாகமம் 9:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 பின்பு அவர், “இஸ்ரவேலர்களே, கேளுங்கள். இன்றைக்கு நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்,+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களைக் கைப்பற்றப்போகிறீர்கள்.+ அங்கிருக்கிற நகரங்கள் மாபெரும் நகரங்கள், வானத்தைத் தொடுமளவுக்கு உயரமான மதில்கள் உள்ள நகரங்கள்.+ 2 அங்கு ஏராளமான ஏனாக்கியர்கள் இருக்கிறார்கள்.+ அவர்கள் மிகவும் உயரமானவர்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். அவர்களோடு மோத யாராலும் முடியாது என்று ஜனங்கள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறீர்கள். 3 அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு முன்னால் போவார் என்பதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர் சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ அவர் உங்கள் கண் முன்னால் அவர்களைத் தோற்கடித்து, அழித்துவிடுவார். யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, நீங்கள் அவர்களைச் சீக்கிரமாகத் துரத்தியடிப்பீர்கள், ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவீர்கள்.+
-