உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 16:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனால், கேசேரில் வாழ்ந்துவந்த கானானியர்களை எப்பிராயீமியர்கள் துரத்தியடிக்கவில்லை.+ அதனால், கானானியர்கள் இன்றுவரை அவர்களோடு குடியிருந்து,+ அவர்களுக்குக் கொத்தடிமைபோல் வேலை செய்துவருகிறார்கள்.+

  • 1 ராஜாக்கள் 9:20-22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 மற்ற தேசத்து மக்களான எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களில் மீதியாக இருந்தவர்களின் வம்சத்தார், 21 அதாவது இஸ்ரவேலர்கள் அடியோடு அழிக்காமல் விட்டுவைத்திருந்த ஆட்களின் வம்சத்தார், தேசத்தில் இருந்தார்கள்; சாலொமோன் அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்.+ அவர்கள் இன்றுவரை அவருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.+ 22 ஆனால், இஸ்ரவேலர்களில் யாரையும் அடிமையாக்கவில்லை.+ ஏனென்றால் அவர்கள் சாலொமோனுடைய போர்வீரர்களாக, ஊழியர்களாக, தலைவர்களாக, படை அதிகாரிகளாக, அவருடைய ரதவீரர்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.

  • 1 நாளாகமம் 22:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 கற்களை வெட்டிச் செதுக்குகிறவர்களும் கொத்தனார்களும்+ தச்சர்களும் எல்லா விதமான வேலைகளையும் திறமையாகச் செய்கிறவர்களும் உன்னுடன் இருக்கிறார்கள்.+ வேலையாட்களுக்குப் பஞ்சமே இல்லை.

  • 2 நாளாகமம் 2:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 சுமை சுமக்க 70,000 ஆண்களையும் மலைகளில் கற்களை வெட்டிச் செதுக்க 80,000 ஆண்களையும் வேலைக்கு வைத்தார்;+ இவர்களை மேற்பார்வை செய்ய 3,600 பேரை நியமித்தார்.+

  • 2 நாளாகமம் 2:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பின்பு, மற்ற தேசத்தைச் சேர்ந்த ஆண்கள் எத்தனை பேர் இஸ்ரவேலில் இருக்கிறார்கள் என்பதை சாலொமோன் கணக்கெடுத்தார்.+ இதற்கு முன்பு அவருடைய அப்பா தாவீது கணக்கெடுத்திருந்தார்.+ அவர்கள் மொத்தம் 1,53,600 பேர் இருந்தார்கள். 18 அவர்களில் 70,000 பேரைச் சுமை சுமக்கவும், 80,000 பேரை மலைகளில் கற்களை வெட்டிச் செதுக்கவும் நியமித்தார்.+ இவர்களை மேற்பார்வை செய்ய 3,600 பேரை நியமித்தார்.+

  • 2 நாளாகமம் 8:7-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 மற்ற தேசத்து மக்களான+ ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களில் மீதியாக இருந்தவர்களின் வம்சத்தார், 8 அதாவது இஸ்ரவேலர்கள் அடியோடு அழிக்காமல் விட்டுவைத்திருந்த ஆட்களின் வம்சத்தார்,+ தேசத்தில் இருந்தார்கள்; சாலொமோன் அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார். அவர்கள் இன்றுவரை அவருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.+ 9 ஆனால், இஸ்ரவேலர்களில் யாரையும் அடிமையாக்கி வேலை வாங்கவில்லை;+ ஏனென்றால், அவர்கள் சாலொமோனுடைய போர்வீரர்களாக, அவருடைய படை அதிகாரிகளுக்குத் தலைவர்களாக, அவருடைய ரதவீரர்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்