-
2 சாமுவேல் 7:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 தாவீது ராஜா தன்னுடைய அரண்மனையில் குடியிருந்தார்.+ சுற்றியிருந்த எதிரிகள் எல்லாருடைய தொல்லையிலிருந்தும் விடுவித்து யெகோவா அவருக்கு நிம்மதி கொடுத்திருந்தார். 2 அப்போது அவர் நாத்தான்+ தீர்க்கதரிசியிடம், “பாருங்கள், தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையில்* நான் குடியிருக்கிறேன்,+ ஆனால் உண்மைக் கடவுளின் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருக்கிறது”+ என்று சொன்னார். 3 அதற்கு நாத்தான், “நீங்கள் போய், உங்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள், யெகோவா உங்களுக்குத் துணையாக இருக்கிறார்”+ என்று சொன்னார்.
-
-
1 நாளாகமம் 17:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 தாவீது தன்னுடைய அரண்மனைக்குக் குடிவந்தவுடன் நாத்தான்+ தீர்க்கதரிசியிடம், “பாருங்கள், தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையில் நான் குடியிருக்கிறேன்,+ ஆனால் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருக்கிறது”+ என்று சொன்னார். 2 அதற்கு நாத்தான், “உங்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள், உண்மைக் கடவுள் உங்களுக்குத் துணையாக இருக்கிறார்” என்று சொன்னார்.
-