-
1 ராஜாக்கள் 16:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 உம்ரியின் மகனான ஆகாப் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார். அவருக்கு முன்பிருந்த ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமானவராக இருந்தார்.+ 31 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களை+ இவரும் செய்தார். இது போதாதென்று, சீதோனியர்களின்+ ராஜாவாகிய ஏத்பாகாலின் மகளான யேசபேலைக்+ கல்யாணம் செய்தார், பாகாலுக்கு முன்னால் தலைவணங்கி, அதற்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்.+
-