-
2 நாளாகமம் 10:1-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 ரெகொபெயாம் சீகேமுக்குப்+ போனார்; ஏனென்றால், அவரை ராஜாவாக்க இஸ்ரவேலர்கள் எல்லாரும் அங்கே வந்திருந்தார்கள்.+ 2 இந்த விஷயத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாம்+ கேள்விப்பட்டவுடன், எகிப்திலிருந்து திரும்பி வந்தார் (அந்தச் சமயத்தில் அவர் எகிப்தில் இருந்தார்; முன்பு சாலொமோன் ராஜாவுக்குப் பயந்து எகிப்துக்கு ஓடிப்போயிருந்தார்.)+ 3 இஸ்ரவேலர்கள் ஆள் அனுப்பி அவரை வரவழைத்தார்கள். பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் ரெகொபெயாமிடம் வந்து, 4 “உங்களுடைய அப்பா எங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார்.+ நீங்கள் அந்தச் சுமையைக் குறைத்து எங்களுடைய வேலையைச் சுலபமாக்கினால், நாங்கள் உங்களுக்குச் சேவை செய்வோம்” என்று சொன்னார்கள்.
-