-
நியாயாதிபதிகள் 9:53, 54பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
53 அப்போது ஒரு பெண், மாவு அரைக்கிற கல்லின்* மேற்கல்லை எடுத்து அபிமெலேக்கின் தலைமேல் போட்டாள். அவனுடைய மண்டை உடைந்தது.+ 54 உடனே, அவன் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்த பணியாளனைக் கூப்பிட்டு, “உன் வாளை உருவி என்னைக் கொன்றுவிடு. அப்போதுதான், ‘இவன் ஒரு பெண்ணின் கையால் செத்தான்’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள்” என்றான். அதனால், அவனுடைய பணியாளன் அவனை வாளால் குத்தினான், அவன் செத்துப்போனான்.
-
-
1 சாமுவேல் 31:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அதனால், சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு. இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள்+ வந்து என்னைக் குத்திக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்” என்றார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+
-
-
2 சாமுவேல் 17:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 தன்னுடைய ஆலோசனைப்படி அப்சலோம் நடக்கவில்லை எனத் தெரிந்ததும், அகித்தோப்பேல் ஒரு கழுதைமேல் சேணம்* வைத்துத் தன்னுடைய சொந்த ஊருக்குப் போனான்.+ வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு,+ தூக்குப்போட்டுக்கொண்டு செத்தான்.+ பின்பு, அவனுடைய முன்னோர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்.
-