-
எரேமியா 40:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 எரேமியா போகாமல் தயங்கிக்கொண்டே இருந்தபோது காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான் அவரிடம், “நீ சாப்பானின்+ மகனாகிய அகிக்காமின்+ மகன் கெதலியாவிடம்+ போய், அவரோடு இருக்கிற ஜனங்களுடன் தங்கு. ஏனென்றால், அவரை யூதாவின் நகரங்களுக்கு அதிகாரியாக பாபிலோன் ராஜா நியமித்திருக்கிறார். அங்கே போக விருப்பம் இல்லையென்றால் நீ வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம்” என்று சொன்னான்.
பின்பு, அவருக்கு உணவும் அன்பளிப்பும் கொடுத்து அனுப்பி வைத்தான். 6 எரேமியா மிஸ்பாவிலிருந்த+ அகிக்காமின் மகன் கெதலியாவிடம் போனார். அங்கே இருந்த ஜனங்களோடு தங்கினார்.
-