-
2 ராஜாக்கள் 14:11-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ஆனால் அமத்சியா அவர் பேச்சைக் கேட்கவில்லை.+
அதனால், இஸ்ரவேலின் ராஜாவான யோவாஸ் போருக்குப் போனார். அவரும் யூதாவின் ராஜாவான அமத்சியாவும் யூதாவுக்குச் சொந்தமான பெத்-ஷிமேசில்+ நேருக்கு நேர் சண்டை போட்டார்கள். 12 யூதாவைச் சேர்ந்த வீரர்கள் இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போய், அவரவருடைய வீடுகளுக்கு* தப்பித்து ஓடினார்கள். 13 அகசியாவின் பேரனும் யோவாசின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய அமத்சியாவை இஸ்ரவேலின் ராஜா யோவாஸ் பெத்-ஷிமேசில் பிடித்தார். பின்பு, அவரும் அவருடைய படையினரும் எருசலேமுக்கு வந்தார்கள். எருசலேம் மதில் சுவரை ‘எப்பிராயீம் நுழைவாசல்’+ தொடங்கி ‘மூலை நுழைவாசல்’+ வரை 400 முழ* நீளத்துக்கு யோவாஸ் இடித்துப்போட்டார். 14 யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த எல்லா தங்கத்தையும் வெள்ளியையும் மற்ற எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டார். சிலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப் போனார்.
-