-
2 நாளாகமம் 5:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 எக்காளம் ஊதுகிறவர்களும் பாடகர்களும் ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்கு நன்றி சொல்லி புகழ் பாடினார்கள். எக்காளங்களையும் ஜால்ராக்களையும் மற்ற இசைக் கருவிகளையும் இசைத்துக்கொண்டே, “அவர் நல்லவர், என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; அப்போது யெகோவாவின் ஆலயத்தை மேகம் சூழ்ந்துகொண்டது.+
-
-
2 நாளாகமம் 7:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 குருமார்கள் அவரவர் பணி செய்யும் இடங்களில் நின்றுகொண்டிருந்தார்கள். அதேபோல, லேவியர்களும் யெகோவாவுக்குப் பாடல்கள் பாட இசைக் கருவிகளை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்கள்.+ (யெகோவாவுக்கு நன்றிப் பாடல் பாடுவதற்காக இந்த இசைக் கருவிகளை தாவீது ராஜா உருவாக்கியிருந்தார். தாவீது பாடும்போது, “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்லி அவர்கள்* பதில்பாட்டுப் பாடுவார்கள்.) பின்பு, லேவியர்களுக்கு எதிரில் இருந்த குருமார்கள் சத்தமாக எக்காளங்களை ஊதினார்கள்.+ அப்போது, இஸ்ரவேலர்கள் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
-