14 நிலத்திலிருந்து அவர் உணவை விளையச் செய்கிறார்.
ஆடுமாடுகளுக்காகப் புல்லையும்,
மனிதர்களுக்காகச் செடிகொடிகளையும் முளைக்க வைக்கிறார்.+
15 மனிதனுடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்த திராட்சமதுவையும்,+
முகத்தைப் பளபளப்பாக்க எண்ணெயையும்,
இதயத்துக்குத் தெம்பளிக்க உணவையும் தருகிறார்.+