-
ஆதியாகமம் 1:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 பின்பு கடவுள், “வானத்துக்குக் கீழே இருக்கிற தண்ணீரெல்லாம் ஒருபக்கமாக ஒதுங்கட்டும், காய்ந்த தரை உண்டாகட்டும்”+ என்று சொன்னார். அது அப்படியே ஆனது. 10 காய்ந்த தரைக்கு நிலம் என்று கடவுள் பெயர் வைத்தார்.+ ஒருபக்கமாக ஒதுங்கிய தண்ணீருக்குக் கடல்+ என்று பெயர் வைத்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன.+
-