-
2 சாமுவேல் 15:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அவன் விடியற்காலையிலேயே எழுந்து நகரவாசலுக்குப்+ போகிற வழியில் நின்றுகொள்வான். ராஜாவிடம் நீதி கேட்க+ யாராவது வந்தால் அவரைக் கூப்பிட்டு, “எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர், “அடியேன் இஸ்ரவேலில் இந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன், இந்த ஊரிலிருந்து வருகிறேன்” என்று பதில் சொல்வார். 3 பின்பு அப்சலோம் அவரிடம், “நீங்கள் சொல்வதெல்லாம் நியாயமாக இருக்கிறது, ஆனால் உங்கள் வழக்கை விசாரிக்க ராஜா தரப்பில் ஒரு ஆள்கூட இல்லையே” என்று சொல்வான்.
-