உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 2:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நீ கேட்டால், தேசங்களை உனக்குச் சொத்தாகக் கொடுப்பேன்.

      பூமி முழுவதையுமே உனக்குச் சொந்தமாகத் தருவேன்.+

       9 நீ அந்தத் தேசங்களை இரும்புச் செங்கோலால் அடித்து நொறுக்குவாய்.+

      மண்பாத்திரத்தை உடைப்பது போல உடைத்து நொறுக்குவாய்”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 45:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 கம்பீரமாகப் போய் எதிரிகளை வெல்லுங்கள்.+

      சத்தியத்துக்காகவும் மனத்தாழ்மைக்காகவும் நீதிக்காகவும் போர் செய்ய

      குதிரையில் ஏறிப் போங்கள்.+

      உங்கள் வலது கை பிரமிப்பான காரியங்களைச் செய்யும்.

       5 உங்களுடைய அம்புகள் கூர்மையாக இருக்கின்றன.

      ஜனங்களை உங்கள்முன் விழ வைக்கின்றன.+

      ராஜாவின் எதிரிகளுடைய இதயத்தில் பாய்கின்றன.+

  • மத்தேயு 28:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அப்போது, இயேசு சீஷர்களுக்குப் பக்கத்தில் போய், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.+

  • வெளிப்படுத்துதல் 6:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அப்போது, ஒரு வெள்ளைக் குதிரை+ வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவரின் கையில் ஒரு வில் இருந்தது. அவருக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது.+ அவர் ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுப் போனார், ஜெயித்து முடிப்பதற்காகப் புறப்பட்டுப் போனார்.+

  • வெளிப்படுத்துதல் 12:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எல்லா தேசங்களையும் இரும்புக் கோலால் நொறுக்கப்போகிற* ஓர் ஆண் குழந்தையை,+ ஓர் ஆண்மகனை, அவள் பெற்றெடுத்தாள்.+ கடவுளிடமும் அவருடைய சிம்மாசனத்திடமும் அவளுடைய குழந்தை எடுத்துக்கொள்ளப்பட்டது.

  • வெளிப்படுத்துதல் 19:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ! ஒரு வெள்ளைக் குதிரை+ இருந்தது. நம்பகமானவர்+ என்றும், உண்மையானவர்+ என்றும் அழைக்கப்படுகிறவர் அதன்மேல் உட்கார்ந்திருந்தார்; அவர் நீதியாக நியாயந்தீர்க்கிறவர், நீதியாகப் போர் செய்கிறவர்.+

  • வெளிப்படுத்துதல் 19:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 தேசத்தாரை வெட்டிப் போடுவதற்காகக் கூர்மையான நீண்ட வாள்+ ஒன்று அவருடைய வாயிலிருந்து வெளிப்பட்டது. இரும்புக்கோலால் அவர்களை அவர் நொறுக்குவார்.*+ அதோடு, சர்வவல்லமையுள்ள கடவுளுடைய கடும் கோபம் என்ற திராட்சரச ஆலையில் திராட்சைப் பழங்களை மிதிப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்