-
யாத்திராகமம் 31:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 இஸ்ரவேலர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைத் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டும், இது ஒரு நிரந்தர ஒப்பந்தம். 17 எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் இது ஒரு நிரந்தர அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், யெகோவாவாகிய நான் ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் படைத்தேன். ஏழாம் நாளில் வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுத்தேன்’”+ என்றார்.
-
-
1 நாளாகமம் 17:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்களைப் போல் இந்த உலகத்தில் வேறெந்த மக்கள் இருக்கிறார்கள்?*+ உண்மைக் கடவுளே, இஸ்ரவேலர்களை உங்களுடைய சொந்த மக்களாக ஆக்குவதற்கென்று நீங்களே போய் அவர்களை விடுவித்து வந்தீர்களே,+ அற்புதங்களையும் பிரமிப்பூட்டும் செயல்களையும் செய்து உங்களுடைய பெயருக்குப் புகழ் சேர்த்தீர்களே.+ நீங்கள் எகிப்திலிருந்து விடுவித்த உங்கள் மக்களின் கண் முன்னால் மற்ற தேசத்து மக்களை விரட்டியடித்தீர்களே.+
-