35 யெகோவா சொல்வது இதுதான்.
பகலில் வெளிச்சம் தர சூரியனைப் படைத்து,
ராத்திரியில் வெளிச்சம் தர நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும் சட்டங்களைக் கொடுத்து,
கடலைக் கொந்தளிக்கவும், அலைகளைப் பொங்கியெழவும் வைக்கிறவராகிய
பரலோகப் படைகளின் யெகோவா என்ற பெயருள்ளவர்+ சொல்வது இதுதான்:
36 “‘இந்த விதிமுறைகள் எப்படி ஒருநாளும் ஒழிந்துபோகாதோ
அப்படியே, இஸ்ரவேல் வம்சமும் என் முன்னால் ஒரு தேசமாக இல்லாதபடி ஒருநாளும் ஒழிந்துபோகாது’+ என்று யெகோவா சொல்கிறார்.”