உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 28:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ஆகாஸ்+ ராஜாவானபோது அவருக்கு 20 வயது. அவர் எருசலேமில் 16 வருஷங்கள் ஆட்சி செய்தார். தன்னுடைய மூதாதையான தாவீது யெகோவாவுக்குப் பிரியமாக நடந்ததுபோல் அவர் நடக்கவில்லை.+

  • 2 நாளாகமம் 28:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதோடு, பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்* பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார், தன்னுடைய மகன்களை நெருப்பில் சுட்டெரித்தார்.+ இப்படி, இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+

  • 2 நாளாகமம் 33:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 மனாசே+ 12 வயதில் ராஜாவாகி, 55 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+

  • 2 நாளாகமம் 33:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்,*+ சொந்த மகன்களையே நெருப்பில் பலி கொடுத்தார்.*+ மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டார்,+ குறிசொன்னார், பில்லிசூனியம் செய்தார், ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் நியமித்தார்.+ யெகோவா வெறுக்கிற காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்து, அவரைப் புண்படுத்தினார்.

  • எரேமியா 7:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 பென்-இன்னோம்*+ பள்ளத்தாக்கில்* இருக்கிற தோப்பேத்தில்* ஆராதனை மேடுகளைக் கட்டி, அங்கே அவர்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் சுட்டெரித்தார்கள்.+ அப்படிச் செய்யும்படி நான் கட்டளை கொடுக்கவே இல்லை. அந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்