உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 12:29-31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 உங்கள் கடவுளாகிய யெகோவா, நீங்கள் கைப்பற்றப்போகிற தேசத்திலுள்ள ஜனங்களை அழித்துவிட்டு+ உங்களை அங்கே குடியேற்றும்போது, 30 நீங்கள் படுகுழியில் விழாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அந்த ஜனங்கள் அவர்களுடைய தெய்வங்களை எப்படியெல்லாம் வணங்கினார்கள் என்று விசாரிக்காதீர்கள். ‘நானும் அப்படியே செய்வேன்’+ என்று சொல்லாதீர்கள். 31 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் அப்படி வணங்கக் கூடாது. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களை வணங்கும்போது யெகோவா அருவருக்கிற எல்லாவற்றையும் செய்கிறார்கள், தங்கள் மகன்களையும் மகள்களையும்கூட அந்தத் தெய்வங்களுக்காக நெருப்பில் பலி கொடுக்கிறார்கள்.+

  • 2 ராஜாக்கள் 17:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 தங்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் பலி கொடுத்தார்கள்,*+ குறி கேட்டார்கள்,+ சகுனம் பார்த்தார்கள், யெகோவாவைப் புண்படுத்துவதற்காக அவர் வெறுக்கிற காரியங்களை வேண்டுமென்றே செய்துவந்தார்கள்.

  • 2 நாளாகமம் 28:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ஆகாஸ்+ ராஜாவானபோது அவருக்கு 20 வயது. அவர் எருசலேமில் 16 வருஷங்கள் ஆட்சி செய்தார். தன்னுடைய மூதாதையான தாவீது யெகோவாவுக்குப் பிரியமாக நடந்ததுபோல் அவர் நடக்கவில்லை.+

  • 2 நாளாகமம் 28:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதோடு, பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்* பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார், தன்னுடைய மகன்களை நெருப்பில் சுட்டெரித்தார்.+ இப்படி, இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+

  • 2 நாளாகமம் 33:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 மனாசே+ 12 வயதில் ராஜாவாகி, 55 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+

  • 2 நாளாகமம் 33:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்,*+ சொந்த மகன்களையே நெருப்பில் பலி கொடுத்தார்.*+ மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டார்,+ குறிசொன்னார், பில்லிசூனியம் செய்தார், ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் நியமித்தார்.+ யெகோவா வெறுக்கிற காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்து, அவரைப் புண்படுத்தினார்.

  • எசேக்கியேல் 20:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 இன்றுவரை உங்களுடைய அருவருப்பான சிலைகளுக்குப் பலிகளைச் செலுத்தி, உங்கள் மகன்களை நெருப்பில் பலி கொடுத்து,*+ உங்களையே தீட்டுப்படுத்துகிறீர்கள். அதேசமயத்தில் என்னிடம் வந்து விசாரிக்கிறீர்கள். இஸ்ரவேல் ஜனங்களே, நான் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமோ?+

      ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் உங்களுக்குப் பதில் சொல்ல மாட்டேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்