-
உபாகமம் 12:29-31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 உங்கள் கடவுளாகிய யெகோவா, நீங்கள் கைப்பற்றப்போகிற தேசத்திலுள்ள ஜனங்களை அழித்துவிட்டு+ உங்களை அங்கே குடியேற்றும்போது, 30 நீங்கள் படுகுழியில் விழாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அந்த ஜனங்கள் அவர்களுடைய தெய்வங்களை எப்படியெல்லாம் வணங்கினார்கள் என்று விசாரிக்காதீர்கள். ‘நானும் அப்படியே செய்வேன்’+ என்று சொல்லாதீர்கள். 31 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் அப்படி வணங்கக் கூடாது. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களை வணங்கும்போது யெகோவா அருவருக்கிற எல்லாவற்றையும் செய்கிறார்கள், தங்கள் மகன்களையும் மகள்களையும்கூட அந்தத் தெய்வங்களுக்காக நெருப்பில் பலி கொடுக்கிறார்கள்.+
-
-
எசேக்கியேல் 20:31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 இன்றுவரை உங்களுடைய அருவருப்பான சிலைகளுக்குப் பலிகளைச் செலுத்தி, உங்கள் மகன்களை நெருப்பில் பலி கொடுத்து,*+ உங்களையே தீட்டுப்படுத்துகிறீர்கள். அதேசமயத்தில் என்னிடம் வந்து விசாரிக்கிறீர்கள். இஸ்ரவேல் ஜனங்களே, நான் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமோ?+
‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் உங்களுக்குப் பதில் சொல்ல மாட்டேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
-