31 யோவாகாஸ்+ ராஜாவானபோது அவருக்கு 23 வயது; அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அமுத்தாள்;+ அவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள்.
33 காமாத் பகுதியிலிருந்த ரிப்லாவில் பார்வோன் நேகோ+ அவரைச் சிறையில் அடைத்தான்;+ எருசலேமில் அவருடைய ஆட்சிக்கு முடிவுகட்டினான். பின்பு, 100 தாலந்து* வெள்ளியையும் ஒரு தாலந்து தங்கத்தையும் தரச்சொல்லி, அவருடைய தேசத்துக்கு அபராதம் விதித்தான்.+