-
எசேக்கியேல் 21:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 “மனிதகுமாரனே, நீ ஒரு வழியை வரைந்து காட்டு. அது ஒரு தேசத்திலிருந்து புறப்பட வேண்டும். ஒரு இடத்துக்கு வந்தவுடன் அது இரண்டு வழிகளாகப் பிரிந்து இரண்டு நகரங்களுக்குப் போக வேண்டும். வாளோடு வருகிற பாபிலோன் ராஜா அதில் எந்த வழியில் போவதென்று முடிவுசெய்ய வேண்டும். அது இரண்டாகப் பிரிகிற இடத்தில், திசைகாட்டும் கம்பத்தை நீ நிறுத்த வேண்டும். 20 ஒரு வழி அம்மோனியர்களின் நகரமான ரப்பாவுக்குப்+ போக வேண்டும். இன்னொரு வழி யூதாவிலுள்ள மதில் சூழ்ந்த எருசலேமுக்குப்+ போக வேண்டும்.
-