-
1 ராஜாக்கள் 14:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 யெகோவா வெறுக்கிற காரியங்களை யூதா மக்கள் செய்தார்கள்.+ அவர்கள் பயங்கரமான பாவங்களைச் செய்து தங்களுடைய முன்னோர்களைவிட அதிகமாக அவரைக் கோபப்படுத்தினார்கள்.+ 23 அதோடு, எல்லா மலைகளின் மீதும்+ அடர்த்தியான எல்லா மரங்களின் கீழும்+ ஆராதனை மேடுகளைக் கட்டினார்கள், பூஜைத் தூண்களையும் பூஜைக் கம்பங்களையும்*+ வைத்தார்கள்.
-
-
எசேக்கியேல் 6:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 கொல்லப்பட்டவர்களுடைய பிணங்கள் அவர்களுடைய அருவருப்பான சிலைகளுக்கு முன்பாகக் கிடக்கும். பலிபீடங்களைச் சுற்றிலும், உயர்ந்த குன்றுகளிலும், மலை உச்சிகளிலும், அடர்த்தியான மரங்களின் கீழும், பெரிய மரங்களின் கீழும், அருவருப்பான சிலைகளைப் பிரியப்படுத்துவதற்காக வாசனையுள்ள பலிகளை+ அவர்கள் செலுத்திய மற்ற எல்லா இடங்களிலும் பிணங்கள் கிடக்கும்.+ அதைப் பார்க்கும்போது நான் யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்.+
-