-
மத்தேயு 2:16-18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 ஜோதிடர்கள் தன்னைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டார்கள் என்பது தெரிந்ததும் ஏரோது பயங்கரமாகக் கோபப்பட்டான்; அதனால், ஜோதிடர்களிடம் நன்றாக விசாரித்து உறுதிசெய்த காலத்தை+ வைத்து அந்தப் பிள்ளையின் வயதைக் கணக்கிட்டான்; பின்பு, ஆட்களை அனுப்பி, பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் இருந்த இரண்டு வயதும் அதற்குட்பட்ட வயதுமுள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுபோட்டான். 17 எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்ட இந்த விஷயம் அப்போது நிறைவேறியது: 18 “ராமாவில் அழுகை சத்தமும் பயங்கர புலம்பல் சத்தமும் கேட்டது; ராகேல்+ தன்னுடைய பிள்ளைகளுக்காக அழுதுகொண்டிருந்தாள்; யாராலும் அவளைச் சமாதானப்படுத்த முடியவில்லை; ஏனென்றால், அவளுடைய பிள்ளைகள் அவளோடு இல்லை.”+
-