உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 33:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 எனக்கு எதிராக அவர்கள் செய்த எல்லா பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து அவர்களைத் தூய்மையாக்குவேன்.+

  • எரேமியா 50:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில்,

      இஸ்ரவேலிடம் குற்றம் இருக்கிறதா என்று நான் தேடிப் பார்ப்பேன்.

      ஆனால், அவனிடம் குற்றமே இருக்காது.

      யூதாவிடம் எந்தப் பாவமும் இருக்காது.

      நான் உயிரோடு விட்டுவைத்திருக்கிற ஜனங்களை மன்னிப்பேன்.”+

  • மத்தேயு 26:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதோடு, ஒரு கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்களிடம் கொடுத்து, “நீங்கள் எல்லாரும் இதிலிருந்து குடியுங்கள்;+ 28 ஏனென்றால் இது, ‘ஒப்பந்தத்தை+ உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை’+ குறிக்கிறது; என் இரத்தம், பாவ மன்னிப்புக்கென்று+ பலருக்காகச் சிந்தப்படப்போகிறது.+

  • எபிரெயர் 8:10-12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ‘அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் ஜனங்களோடு செய்யப்போகிற ஒப்பந்தம் இதுதான்’ என்று யெகோவா* சொல்கிறார். ‘நான் அவர்களுடைய மனதில் என் சட்டங்களை வைப்பேன், அவர்களுடைய இதயத்தில் அவற்றை எழுதுவேன்.+ நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+

      11 அதுமுதல் அவர்கள் யாரும் தங்களுடைய சக குடிமகனிடமோ தங்கள் சகோதரனிடமோ, “யெகோவாவை* பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!” என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள். 12 அவர்களுடைய அநீதியான செயல்களை இரக்கத்தோடு நான் மன்னிப்பேன், அவர்களுடைய பாவங்களை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்’ என்றும் அவர் சொல்கிறார்.”+

  • எபிரெயர் 9:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதனால்தான், கிறிஸ்து ஒரு புதிய ஒப்பந்தத்தின் மத்தியஸ்தராக+ ஆகியிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் வாக்குறுதி கொடுக்கப்பட்ட முடிவில்லாத வாழ்வை* பெறுவதற்காக+ அப்படி மத்தியஸ்தராக ஆகியிருக்கிறார். அவருடைய மரணத்தின் மூலம்தான் இது சாத்தியமாகி இருக்கிறது; அவருடைய மரணத்தின் மூலம்தான் முந்தின ஒப்பந்தத்தின்கீழ் செய்த குற்றங்களிலிருந்து ஒரு மீட்புவிலையால்+ அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

  • எபிரெயர் 10:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 “அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்”+ என்றும் அது சொல்கிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்