உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 36:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+

  • நெகேமியா 9:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 எங்களுக்கு வந்த துன்பங்களுக்காக உங்களை நாங்கள் குற்றப்படுத்த முடியாது. நீங்கள் நீதியுள்ளவர். நீங்கள் உண்மையாக நடந்துகொண்டீர்கள். நாங்கள்தான் கெட்ட வழியில் நடந்தோம்.+

  • தானியேல் 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 யெகோவாவே, உங்களிடம் நீதி குடியிருக்கிறது. ஆனால், எங்களிடம் இன்றுவரை அவமானம்தான் தங்கியிருக்கிறது. யூதாவையும் எருசலேமையும் சேர்ந்த இஸ்ரவேலர்களான நாங்கள் எல்லாரும் உங்களுக்குத் துரோகம் செய்ததால் சுற்றுப்புற தேசங்களுக்கும் தூர தேசங்களுக்கும் எங்களைத் துரத்தியடித்தீர்கள்.+

  • தானியேல் 9:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உங்கள் ஜனங்களாகிய நாங்கள் செய்த பாவங்களினாலும் எங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளினாலும் சுற்றியுள்ளவர்கள் எருசலேம் நகரத்தையும் எங்களையும் பழித்துப் பேசுகிறார்கள்.+ யெகோவாவே, நீங்கள் எப்போதும் நீதியாக நடந்துகொள்பவர்.+ அதனால், இப்போதும் பரிசுத்த மலையாகிய எருசலேம் நகரத்தின் மேலுள்ள கடும் கோபத்தைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்