-
2 ராஜாக்கள் 25:18-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 முதன்மை குரு செராயாவையும்,+ இரண்டாம் குரு செப்பனியாவையும்,+ காவலாளிகள் மூன்று பேரையும் நேபுசராதான் பிடித்துக்கொண்டு போனான்.+ 19 போர்வீரர்களுக்குத் தலைவரான அரண்மனை அதிகாரி ஒருவரையும், நகரத்தில் இருந்த ராஜாவின் நெருங்கிய நண்பர்கள் ஐந்து பேரையும், போருக்கு ஆட்களைத் திரட்டுகிற படைத் தளபதியின் செயலாளரையும், நகரத்தில் மிச்சமிருந்த பாமர மக்களில் 60 ஆண்களையும் பிடித்துக்கொண்டு போனான். 20 காவலாளிகளின் தலைவன் நேபுசராதான்+ இவர்களைப் பிடித்து ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான்.+ 21 காமாத் பகுதியிலிருந்த+ ரிப்லாவில் பாபிலோன் ராஜா இவர்களை வெட்டிக் கொன்றான். இப்படி, யூதா மக்கள் தங்களுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+
-
-
2 நாளாகமம் 36:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+
-