ஒலிவ மலை
ஒலிவ மலை (1) என்பது, எருசலேமின் கிழக்கே அமைந்திருக்கும் தொடர்ச்சியான சுண்ணாம்புக்கல் குன்றுகளைக் குறிக்கிறது. ஒலிவ மலைக்கும் எருசலேமுக்கும் இடையில் கீதரோன் பள்ளத்தாக்கு இருக்கிறது. ஆலயப் பகுதிக்கு (2) எதிரே இருந்த அதன் சிகரத்தின் அதிகபட்ச உயரம் சுமார் 812 மீ. (2,644 அடி). அதுதான் பைபிளில் பொதுவாக ஒலிவ மலை என்று அழைக்கப்படுகிறது. ஒலிவ மலையின் ஒரு பகுதியில்தான் இயேசு தன்னுடைய பிரசன்னத்தின் அடையாளத்தைப் பற்றித் தன் சீஷர்களுக்கு விளக்கினார்.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: