காட்டுப் பூக்கள்
‘காட்டுப் பூக்கள் வளருவதைக் கவனித்துப் பார்க்கும்படி’ இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். பைபிள் மொழிபெயர்ப்புகளில் “காட்டுப் பூக்கள்” என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் கிரேக்க வார்த்தை ட்யுலிப், ஹையசின்த், ஐரிஸ், க்ளேடியோலஸ் போன்ற பல விதமான பூக்களைக் குறித்திருக்கலாம். இயேசு ஒருவேளை மணிப்பஞ்சு (anemone) என்ற பூவை மனதில் வைத்துச் சொல்லியிருக்கலாம் என்று சில அறிஞர்கள் நம்புகிறார்கள். ஆனால், லில்லிப் பூவைப் போன்ற பூக்களை இயேசு பொதுப்படையாகக் குறிப்பிட்டிருக்கலாம். இங்கு காட்டப்பட்டிருப்பது ஒரு வகையான மணிப்பஞ்சு (Anemone coronaria). இந்தப் பூக்கள் இன்று இஸ்ரவேலில் பொதுவாகக் காணப்படுகின்றன. நீலம், இளம் சிவப்பு, ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களிலும் இவை காணப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: